top of page
குந்தவைப் பிராட்டியார்

குந்தவைப் பிராட்டியார்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1365
₹80.00 Regular Price
₹74.40Sale Price

ஆசிரியர்: ச. செல்வராஜ் 

வகை: வாழ்க்கை வரலாறு, தமிழ்நாடு 

பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம் 

மொழி: தமிழ் 

 

குந்தவைப் பிராட்டியார், Kunthavai Piraattiyaar, ச. செல்வராஜ், Sa. Selvaraj Books, கௌரா பதிப்பகக் குழுமம், Gowra Pathippaga Kuzhumam, வாழ்க்கை வரலாறு, தமிழ்நாடு, Vazhkai Varalaru, Thamizhnadu, Tamil Nadu, Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    பிற்கால் சோழர்களில் முதலாம் இராஜராஜன் என்கின்ற அருள்மொழிவர்மன் என்பவனது காலத்தை சோழர்களின் பொற்காலம் என வரலாற்று அறிஞர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். இராஜராஜசோழன் தனது வாழ்நாளில் போற்றி பெருமைப்படுத்திய பெண்மணிகள் இருவர் ஆவர். மதுராந்தகசோழன் என்கின்ற உத்தம சோழனின் தாயாரும் கண்டராதித்தனின் மனைவியுமான செம்பியன்மாதேவியார் ஒருவர். மற்றவர் அவனது மூத்தசகோதரியான குந்தவைநாச்சியார் என்கின்ற மந்தாகினி தேவி ஆவார். சோழர் குலத்தின் மூத்தபெண்மணி என்ற வகையில்பாட்டி உறவுமுறை உள்ள செம்பியன் மாதேவியாரை போற்றி பெருமைப்படுத்தியதில் வியப்பேதுமில்லை. தன்னைவிட சில வருடங்கள் மூத்தவரான குந்தவை நாச்சியாரை தனது தாய்க்கு நிகராக போற்றி பெருமைப்படுத்தியது வரலாற்றில்காணக் கிடைக்கிறது . தனது மகளுக்கு தமக்கையின் பெயரையேவைத்துள்ளதும் குந்தவை நாச்சியார் மீது இராஜராஜசோழன் வைத்திருந்த மதிப்பும் மரியாதையையும் உறுதிப்படுத்துகிறது. சோழவரலாற்றில் குந்தவை என பெயரிடப்பட்டவர்கள் மூவர். கீழைச்சாளுக்கிய அரசகுல பெண்ணை இராஜராஜ சோழனின் பாட்டனாரான அரிஞ்செயச்சோழன் மணம்செய்திருந்தான். இவர்வீமன்குந்தவை என வரலாற்றில் குறிப்பிடப் படுகிறார். இவரது பெயரையே இராஜராஜசோழனின் திருத்தமக்கையான மந்தாகினி என்கின்ற குந்தவைக்கு சூட்டியுள்ளனர். இவர் மீது கொண்டமதிப்பும் மரியாதையாலும் தனது மகளுக்குந்தவை என இராஜராஜசோழன் பெயரிட்டுள்ளான்.இராஜராஜனின் தமக்கைகுந்தவையையும் மகள் குந்தவையையும் ஒருவராக கருதி குழப்பம் அடைவதுணடு. இராஜராஜசோழனின் அக்காள் குந்தவையை ஆழ்வார்பரந்தகன் குந்தவை பிராட்டியார் வள்ளவரையர்வந்தியத்தேவர் மாதேவர்மாதேவியார் திருமகளார் ஸ்ரீ பராந்தகன் குந்தவை பிராட்டியார் என்று சோழர்களின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சிறப்பாகக்குறித்துவருகின்றன. அழகும் ஆற்றலும் மதி நுட்பமும் மிக்க குந்தவைநாச்சியார், தனது மற்றொரு சகோதரன் ஆதித்தியகரிகாலன் கொலையுண்டதற்கு பிறகு, தனது தந்தை சுந்தர்ச்சோழன் இறப்புக்கு பிறகு, தனது தாயார் வானவன் மாதேவியார் சிதை ஏற்றத்திற்கு பிறகு , தனது தம்பியான இராஜராஜ சோழனை பெற்றோர் இடத்திலிருந்து போற்றி வளர்த்து பதினைந்து ஆண்டுகள் பாதுகாத்து அரியணை ஏற உறுதுணையாய் இருந்துள்ளார். சோழ்ர்களைப் பற்றி ஆய்வு செயதபலரும் இராஜராஜ சோழனின் இளமை பருவம் குறித்து சரியாகத்தரியவில்லை என்று தங்களது ஆய்வு நூல்களில் குறிக்கின்றனர். இராஜராஜசோழனின் இளமைக்காலம் என்பது ஆதித்தியகரிகால சோழனின் படுகாலை, சுந்தரச்சோழன் காஞ்சியில் இருந்த பொன்மாளிகையில் இருந்து எஞ்சியது, வானவன் மாதேவியாரின் எரிமூழ்குதல், உத்தமச்சோழனின் பதினைந்து ஆண்டுகால ஆட்சி காலமாகும், இந்த காலகட்டத்தில் இராஜராஜசோழனும், குந்தவைநாச்சியார் குறித்து சரியாக தெரியவில்லை என்பது ஆய்வுக்குருயதாகும். உத்தமசோழ்னின் ஆட்சியில் மேற்கண்ட .இருவரும் தங்களது ஆதரவாளர்கள் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும், அக்காலகட்டத்தில் குந்தவைநாச்சியார், இராஜராஜசோழனை அரியணை ஏற்ற தயார் செய்துள்ளார் என்பது விளங்குகிறது. மேலும், சோழப்பேரரசில் அரச மகளிரை குடிமக்கள் தெய்வத்திற்கு நிகராக போற்றி வழிபட்டுள்ளனர், குந்தவை நாச்சியார் தஞ்சை பெரியகோயிலுக்கு தம்மையாக ஒரு திருமேனியை செய்து அளித்துள்ளார் என தஞ்சை கோயில் கல்வெட்டி இருந்து அரிய இயலுகிறது. இந்நூலின் முன் அட்டையில் இடம் பெற்றுள்ள பிரதிமம் குந்தவை நாச்சியார் தம்மையாக செய்தருளிய திருமேனியாகும்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page